நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டம்
இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து உத்தியோகத்தர்களும் காலையில் ஒன்று கூடி, நேர்மையான அரசசேவைக்கான உறுதியுரை / சத்தியப்பிரமாணம் செய்து, தங்கள் கடமைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.
நிகழ்ச்சி நிரல்:
1. இறைவணக்கம்
2. தேசியகீதம் இசைத்தல்
3. நேர்மை உறுதியுரை / சத்தியப்பிரமாணம்
4. “நேர்மை கலாச்சாரம்” உரை – பிரதேச செயலாளர் T.M.M. Anzar
5. நன்றியுரை – நிர்வாக உத்தியோகத்தர் A.C.M. Faleel
இந்த நிகழ்வின் மூலம், அரசசேவையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான, நியாயமான பண்பாட்டை வளர்ப்பதற்கான உறுதியை அனைத்து உத்தியோகத்தர்களும் எடுத்தனர்.



























